*
1.
அமிலத்தன்மையைக் குறைக்க
காஸ்டிக் சோடா கலப்படம். கெட்டுப் போன பாலில் பவுடர் தயாரிப்பு. தனியார்
நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டு.
இப்பாவாச்சும்
பாலில் கலப்படம்னு ஒத்துக்கிறாரே அமைச்சர். இது பலகால நடந்து வருகிறதே அப்பவெல்லாம்
தெரியாமையா போச்சு? எல்லாம் காதிலே பூச்சுத்தல்
2.
அரசுப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது
குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்
சேர்க்காதது ஏன்?
20 கேள்விகளுக்கு பதிலளிக்க
உயர் நீதிமன்றம் உத்தரவு.
காலம்
கடந்த ஞானம். இந்தக் கேள்வி தனியார் பள்ளிகளுக்கு அரசு உரிமம் வழங்குவதற்கு
முன்பாகவே, அரசு சட்டம் நிறைவே.ற்றி செய்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள்
மட்டுமல்ல. அனைத்து அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் வகையில் சட்டத் திருத்தம்
கொண்டு வர வேண்டும்.
3
எழுத்தாளர் கழனியூரன்
காலமானார்.
அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
4.
உ.பி. புந்தேல்கண்ட்
பகுதியில் குளம் கிணறுகள் தூர்வாரும் “ நீர்த் தோழிகள் ” பெண்கள் அமைப்பு.
தமிழ்நாட்டில் இதுபோன்று செயல்படும் பெண்கள் உள்ளதா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ்
– 28-06-2017.
தகவல் ; ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment