*
பள்ளிக்கூடத்தில்
பயின்றப்
பட்டாம்பூச்சிகளை
வேட்டையாடிய வேடர்களே
நீங்கள் அழித்தது
ஆயிரங் காலத்துப்
உயிர்கள்.
*
இளம் குழந்தைகளை
இரக்கமின்றி கொன்றொழித்த
கொடூர மதம் பிடித்த
யானைகளே
நீங்கள் அழித்தது
செழித்து வளர வேண்டிய
ஆலவிருட்சங்கள்.
*
அன்பான குழந்தைகளின்
ஆசைக் கனவுகளைச்
சிதைத்த
அகோரி அரக்கர்களே
நீங்கள் துண்டாய்
வெட்டியெறிந்தது
பறவைகளில் பட்டுச்
சிறகுகள்.
*
மனசாட்சிகளை மதங்களிடம்
அடகு வைத்து விட்டு
மண்ணில் பிறந்த
குழந்தைகளை
அழித்தக் கம்சர்களே
கல்விக் கண்திறக்கும்
முன்னெ
காலனின் நரக எல்லை
மரணத்திற்குள்
தள்ளிவிட்டீர்களே…?
*
அன்பு வழிமுறையை
கைவிட்டு
வன்முறையினை பின்பற்றும்
வழிப் போக்கர்களே
நீங்கள் அழிக்க
நினைத்தது
பள்ளியில் பயிலும்
இளம்
மாணவத் தும்பிகளை
அல்ல
உலகில் உன்னதமாய்
வாழும்
உயிர்களைப் பறிப்பதே
உங்கள் லட்சிய
இலக்கு
*
பட்டு ரோஜாப் பூக்களைக்
கிள்ளிப்
பறித்துவிடுவது
எளிது
பதியம்போட்டு வளர்ப்பது
தான்
பெரும் இஷ்டம்
மிகக் கஷ்டம்.
உங்கள் பதினொராவது
விரல் கொண்டு
உயிர்களைப் பறிக்காதீர்கள்
நாளை உங்களுக்காகக்
காத்திருக்கின்றன….??.
[ டிசம்பர் –
2014 - பாகிஸ்தான் பெஷாவர் நகரில்
உயிர் இழந்தப்
பள்ளிக் குழந்தைகள் நினைவாக… ]
*