*
N.G. THURAIVAN'S SENRYU.
*
அணுக்கதிர் அழுக்கு
நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள்
குடிக்கின்றன
மீன்களை மனிதன்
உண்கின்றான்
மனிதனை உண்கிறது
மண்.
*
அன்னிய நாடுகள்
அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக்
கொட்டும்
குப்பைத் தொட்டி
இந்தியா.
*
அன்னியநாடுகள்
மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.
No comments:
Post a Comment