Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 30 April 2015

மே தினம்...!!

இன்று
உலகத் தொழிலாளர் தினம்.
உழைக்கும்
உலக மக்கள் அனைவருக்கும்
தோழமை
நல்வாழ்த்துக்கள்.
*

எலி...!!

*
அகப்பட்டது ஆந்தையிடம்
இருட்டில்
இரைதேட புறப்பட்ட எலி.
*

அம்மாக்கள்....!! [ சென்ரியு ]

*
விடுமுறை விட்டதிலிருந்து
குழந்தைகளின் அட்டகாசம்
தாங்க முடியாத அம்மாக்கள்.
*

Wednesday 29 April 2015

எறும்பு...!! [ சென்ரியு ]

*
இரவு ஆழ்ந்தத் தூக்கம்
கெடுத்து விட்டது
காதிற்குள் புகுந்த எறும்பு.
*

Tuesday 28 April 2015

வால் பையன்...!! [ SENRYU / சென்ரியு ]


*
அருகில் யாருமில்லை
எடுத்துப் பூசிக்கொண்டான்
முகமெல்லாம் சாந்து.
*
ஊரிலிருந்து அக்கா வந்தாள்
எல்லோருக்கும் உதறல்
வன்பேச்சில் வம்புக்காரி.
*
தாங்கவும் முடியவில்லை
சமாளிக்கவும் முடியவில்லை
வால் பையன்களின் குறும்புகள்.

Monday 27 April 2015

இயல்பு....!! [ கவிதை ]


*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.

சலனம்...!! [ ஹைக்கூ ]

*
மேலடுக்கு வெப்ப சலனமழை
பொழிந்தது
குளிர்ந்தது மனச்சலனம்.
*

Sunday 26 April 2015

மதினி...!! [ SENRYU சென்ரியு ]


*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.

*

Thursday 23 April 2015

நீ...!! [ கவிதை ]

நீ….!!
*
நீ மழையாக இல்லாவிட்டால் என் அன்பே
ஒரு மரமாக இரு
வளமுள்ள ஒரு மரமாக இரு
நீ மரமாக இல்லாவிட்டால் என் அன்பே
ஒரு கல்லாக இரு
ஈரலிப்புள்ள கல்லாக இரு
நீ கல்லாக இல்லை என்றால் என் அன்பே
ஒரு சந்திரனாக இரு
அன்புள்ள ஒரு பெண்ணின் கனவில் ஒரு சந்திரனாக  இரு
ஒரு பெண் தன் மகனின்
சவ அடக்கத்தின் போது இப்படிச் சொன்னாள்.
ஆதாரம் ; மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் பக்கம் 86
தமிழாக்கம் : எம்.எ. நுஃமான். 

காதல் துக்கமறியாது....!! [ கவிதை ]


*
முகமெல்லாம் எதற்கு
வியர்த்துக் கொட்டுகிறது?
கைகளில் என்ன நடுக்கம்?
பேச்சில் எதற்கிந்த உளறல்?
நிமிர்ந்துப் பார்த்து நில்
சொல்வதைக் கவனமாகக் கேள்.
வெட்கப்பட்டுக்
கொண்டிருந்தால் எப்படி?
புரிந்துக் கொள்
ஆசை வெட்கமறியாது?
காதல் துக்கமறியாது?

*

Wednesday 22 April 2015

அ....நீதி....!! [ SENRYU / சென்ரியு ]


*
காலங்களை வென்று நிற்கிறது
சத்திய வாக்குகள்.
*
நிதிபதிகளாகி விட்டார்கள்
நீதிபதிகள்.
*
உண்மைகள் வலுவிழந்து
திருத்தப்படுகின்றன தீர்ப்புகள்.

*

வாழ்த்துக்கள்...!!

இன்று உலகப் புத்தக தினம்.
நல்வாழ்த்துக்கள்.
ந.க. துறைவன்.           

Tuesday 21 April 2015

பூமியைக் காப்பாற்ற...!!


*
இயற்கை அளிக்கும் மழை நீர் பூமிக்குள் செல்வதை பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தடுக்கின்றன. காகிதங்கள், காய்கறிகள் மற்றும்
பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால்,அவை பூமியை
விட்டு நீங்க ஒரு மாதம் முதல் 2 மாதங்கள் வரை ஆகும்.
தெர்மாகோல் கப்புகளைப் போட்டால் 50 ஆண்டுகளும், பிளாஸ்டிக் கேன்களைப் போட்டால் 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகளும், பிளாஸ்டிக் பைகளைப் போட்டால் 50 முதல் 1000 ஆண்டுகளும், பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகளும் ஆகும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் அணுகுண்டைவிட அபாயகரமானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியைக் காப்பாற்ற, பூமியின் மீது ஒவ்வொரு மனிதருக்கும் ஆர்வமும், அக்கறையும் ஏற்பட வேண்டும். அதற்கு நிறைய மரங்கள் நட வேண்டும்.
ஆதாரம் ; தி இந்து – 22-04-2015. நாளிதழ் பக்கம் 2.        
*


மனதைப் பண்படுத்துவது என்றால் என்ன?


*        
ஜென் துறவியைச் சந்தித்த ஒருவர் அவரிடம், “ எந்த வகையான மனிதர்கள் மனதைப் பண்படுத்துவதில் ஈடுபட வேண்டும் ” என்று கேட்டார்.
“ என்னைப் போன்றவர்கள் ” என்று பதிலளித்தார் துறவி.
“ உங்களைப் போன்ற மாபெரும் குரு கூடவா. அதைச் செய்ய வேண்டும் ” என வியப்படைந்தார் கேள்விக் கேட்டவர்.
“ ஆம், மனதைப் பண்படுத்துவது என்பது வேறொன்றுமில்லை. ஆடைகள் உடுப்பது, சாப்பிடுவது மாதிரி தான் ” என்றார் குரு.
“ இதெல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் காரியங்கள் தானே, மனப் பண்பாடு என்பதுதான் என்ன,?
“ நான் ஒவ்வொரு என்ன செய்துக் கொண்டு இருக்கிறேன் என நீ நினைக்கிறாய்? என குரு கேட்டதும் பேச்சற்றுப் போனார் கேள்விக் கேட்டவர்.
அன்றாட வாழ்வில் எல்லாக் காரியங்களையும் நாம் கவனமாகவும் நே்மையாகவும் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதுதான் மனப்பக்குவம். இப்படிச் செய்தால் சிறு செயலில்கூட உண்மையின் தெளிவான நாதம் ஒலிக்கும்.
ஆதாரம் ; ஜென் கதைகள் – தமிழில் ; சேஷையா ரவி. பக்கம் 61.

* .   

நிழல்...!! [ கவிதை ]

*
குழந்தைக்குத் தெரிகிறது
நிழலின் அருமை.

*

Monday 20 April 2015

பழகு...!! [ கவிதை ]

*
அத்தை மகள் அழகு
கட்டிக்கிட்டுப் பழகு.
*
பட்டுப் புடவையில் பறக்கும்
பகல் பட்டாம்பூச்சிகள்.
*

இணைப்பு...!! [ கவிதை ]

*
அவள் விரலை
அலங்கரித்தது
நான்
அணிவித்த

வைரமோதிரம்.

காதல்...!! [ கவிதை ]

*
காதல் தூறல் மழை.
*
காதல் வந்தால்
பத்தும் பறந்து விடுகிறது.
*
காதலுக்கு
தொடக்கமுமில்லை
முடியுமில்லை.
ந.க.துறைவன். 

ஆரோக்கியம்...!! [ கவிதை ]

*
கொழுப்புச் சத்து
நோய்க்கு வித்து.
*
அதிக ஆயில்
குறைந்த ஆயுள்
*

Monday 13 April 2015

ரதியோடு வருகிறான்...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
“ மன்மத “ தமிழ்ப் புத்தாண்டு
வரவேற்று
பூத்துக் குலுங்குகின்றன மரங்கள்.
*
மகிழ்ச்சிக்குள் மறைந்திருக்கிறது
மனிதர்களின்
மன்மத வாழ்க்கை.
*
சித்திரைப் பெண்ணாக வருபவள்
இந்த ஆண்டு
மன்மத – ஆணாக வந்திருக்கிறாள்.
*

சித்திரப் பின்னலைப் போல மலை மலர்கள் பூக்கின்றன...!!


*
“ குருவே, தொட்டுணரக் கூடிய பொருட்கள் யாவும் அழிந்து விடுகின்றன. அப்படியிருக்க நிரந்தரமான உண்மை ஏதும் இருக்கிறதா?”.
“ ஆம், இருக்கிறது. “ வனப்புடன் பூத்துக் குலுங்கும் காட்டுப் பூக்கள், பார்வைக்கு உறைந்துவிட்டதைப் போல தோன்றினாலும், உண்மையில் ஒடிக்கொண்டிருக்கும் ஓடை”.
பூக்கள் சீக்கிரமே வாடிவிடும். இருந்தும், காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். நீரோடை ஒடலாம். ஆனால் அதன் மேற்பரப்பு மாறுவதில்லை. வாழ்வின் செயல்பாடுகளுக்குள்தான் அதன் அரத்தம் அடங்கியிருக்கிறது. மாற்றம் என்ற விஷயம் மட்டுமே மாற்றமில்லாமல் இருக்கிறது.

ஆதாரம் ; ஜென் கதைகள். தமிழில் ; சேஷையா ரவி. பக்கம் 97.

*

“ மன்மத ” - வா...வா...!! [ கவிதை ]


*
மன்மதன் வருகிறான்
ஆண்மை வீரன் வருகிறான்
மலர்கள் ரதம் மீதிலேறி
மன்மதன் வருகிறான்.
*
மங்கையர் மையல் கொள்ளும்
வேங்கை மார்பன் வருகிறான்
கரும்பு வில்லை கையிலேந்தி
கட்டழகன் வருகிறான்.
*
காதல் ராணி ரதியுடனே
காதல் மன்னன் வருகிறான்
தங்க கிரீடம் தலையில் தரித்து
மங்கையர் தலைவனாக வருகிறான்.
*
சந்தனம் கமழும் மார்பில் ரதியை
அன்பாய் அணைத்து வருகிறான்
காம நதியில் முக்குளிக்கும்-மதனக்
காம சுந்தரன் வருகிறான்
*
உயிர் மையத் தத்துவத்தை
உலகுக் குணர்த்த வருகிறான்
உலக மக்கள் இன்ப வாழ்வில்
உய்த்துணர்த்த வருகிறான்
*
சிவன் சுட்டெரித்தப் போதிலும்
உயிர்த் தெழுந்து வருகிறான்
காவியமாகி நிலைத்து நிற்கும்
ரதி-மன்மதன் வருகிறான்.
*
மண்ணில் வாழும் மக்களெலாம்
நினைவு கூர்ந்து போற்றவே
மனித உருவெடுத்து வருகிறான்.
“ மன்மத ” ஆண்டாகி வருகிறான்.
ந.க. துறைவன்.

*

“ மன்மத ” வா... வா...!! [ கவிதை ]

*
“ மன்மத ” வா… வா…!!

உலகதமிழ் மக்கள் அனைவருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.   
வாழ்க வளமுடன்
நண்பர்களே…             

*

இன்றிரவு...!! [ ஹைக்கூ ]

*
மழை பெய்துக் கொண்டிருக்கிறது
இசைத்துக் கொண்டிருக்கிறது காற்று
குளுமையாக இருக்கும் இன்றிரவு.
*

Sunday 12 April 2015

அசுரமன அன்பு உறவுகள்....!! [ புதுக்கவிதை ]


*
வீட்டுவாசலில்
பூத்துக் குலுங்குகிறது வேப்பமரம்.
துளசி செடியைச் சுற்றிச் சுற்றி
வருகின்றன வண்டுகள்  
மடல் விரித்து சிரிக்கிறது
கத்தாழை
மங்கலம் தெரிவிக்கிறது
மாவிலைத் தோரணம்.
வாழ்க வளமுடன் – என்று
வரவேற்கிறது ஸ்டிக்கர்.
கடிதங்கள் இல்லாமல்
காலியாக இருக்கிறது
தபால்பெட்டி.
பூட்டப்படாமல் கிடைக்கிறது
இரும்பு கேட்.
நாளிதழை வீசியெறிந்து
போகிறான் பேப்பர் பையன்
மீட்டர் கணக்கெடுக்க வந்த
மின்ஊழியர் அட்டைக் கேட்டு
காலிங்பெல் அழுத்துகிறார்.
உரத்தக் குரல் கொடுக்கிறாள்
காய்காரம்மா.
குப்பைக் கேட்டு மணியடித்து
அழைக்கிறார்கள்
நகராட்சி கடைநிலை ஊழியர்கள்.
என்னவாயிற்று,
இவ்வளவு நேரமாய் யார்
அழைத்தும் உள்ளிருந்து
எவரும் வெளி வரவில்லை
இப்படித்தானிருக்கிறது
எல்லா வீடுகளின் நிலவரம்
உள்ளே மனக் கதவம் திறவாது
பதுங்கியிருக்கின்றன
அசுரமன அன்பு உறவுகள்.
*

Friday 10 April 2015

முரண்...!! [ கவிதை ]


*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும் 
உழைக்கும் தேனீக்கள்.

*.  

சொற்கள்...!! [ சென்ரியு ]

*
ஆறாத ரணக் காயப்படும்
மன வல்லமைப் படைத்தது
ஆயுதங்களை விட சொற்கள்.
*

நிலா...!! [ ஹைக்கூ [

*
எங்கே ஒளிந்திருக்கிறேன்
என்று தேடுகிறாளோ?
சவுக்குத் தோப்பில் நிலா.
*

அனுபவம்...!! [ சென்ரியு ]

*
ஆண்டுக்காண்டு வித்தியாசமாய்
அனுபவிப்பவர்க்குத் தெரியும்
வெயிலின் அருமை
*

ஒரே தரம்...!! [ HAIKU / ஹைக்கூ ]

*
வாழ்க்கை ஒரு வரம்
மனிதருக்கு
வாழக் கிடைப்பது ஒரே தரம்.

*

Thursday 9 April 2015

வண்டாய்...!! [ கவிதை ]


*
உன்
கூந்தலில் சூடியப்
பூவின் வாசம்
நுகர்ந்து
சுற்றிச் சுற்றி
வலம் வரும்
வண்டாகி விடுகிறேன்
நான்
உன்னைக் காணும்
அந்நொடியில்…!!

*

அஞசலி...

*
தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளரான
திரு.ஜெயகாந்தன் அவர்களின் மறைவிற்கு
எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
*

Wednesday 8 April 2015

தும்பிகளாய்...!! [ கவிதை ]


*
உனக்குமொரு
எல்லையிருக்கிறது
எனக்குமொரு
எல்லையிருக்கிறது
நாம் எப்பொழுது
எல்லைக் கடந்து
அன்பில் இணைந்து
காதல் தும்பிகளாய்
வாழப் போகிறோம்…!
*

இரங்கல்...!!

ஆந்திரா வனப் பகுதியில்
துப்பாக்கிச் சூடு
தமிழகக்கூலித் 
தொழிலாளர்கள் பலி
குற்றவாளிகளைச்
சத்தியமாய் அறியும்
செம்மரங்கள்.
*
அனைத்துக் 
குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த இரங்கல்
தெரிவிப்போம்.
*

Tuesday 7 April 2015

பயணம் எங்கே...? [ கவிதை ]


*
செம்பருத்திப் பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக் குருவிகள்.
பாதையில் போகும் பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப் போகிறார்கள்.
அப் பெண்களைப் பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான் வேகமாய்
கருப்புக் கண்ணாடி அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம் விற்கும்
தள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள் பெண்கள்.
காற்றில் பறந்து போகிறது
வெயிலுக்குத் தலையில் சுற்றியிருந்தக் 
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில் ஒதுங்கிய போது
மரத்திலிருந்து விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது காக்கை.  
எதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள் ஒருத்தி். 
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச் சொல்லி
ஏறி அமர்ந்துக் கொண்டார்கள்

வாகனங்களைக் கடந்து கடந்து
ஆட்டோ வேகமாய் மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே கோபமாய்
நெருப்பனலை வீசி நகர்கிறான்
மேகங்களற்ற வானில் சூரியன்…!!
*

Monday 6 April 2015

ஒழிக்க முடியாதது...!![ துணுக்கு ]

*
உலகில் ஒழிக்க முடியாத மூன்றுகள்.
1. ஆசைகள்
2. ஊழல்கள்            

3. கொசுக்கள்.

மணியார்டர் சேவை நிறுத்தமா?

*
சாதாரண கடைகோடி ஏழை மக்களுக்கும் கடந்த நூற்றாண்டு காலமாக சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். இப்பொழுது மணியார்டர் சேவையை நிறுத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. மத்திய அரசு – தனியார் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, எல்லா துறைகளையும் தனியார் மயமாக்கல் செய்து வருகின்றது. அஞ்சல் சேவைகளைப் பெரிதும் தனியார் மயம் ஒப்படைத்த தன் விளைவே, இப்பொழுது அஞ்சல்துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்பி வருகின்ற செயலாகும். ஏதோ உள்ளே விட்டுகிட்டு குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்?. மத்திய அரசு அவர்களின் அவதூறுகளைப் பட்டுத்தானே தீரவேண்டும். அவதூறு பரப்பும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சட்டரீதியான கட்டுப்பாடுகளையும் விதிக்கவேண்டும்.  
சேவை என்பது யாருடைய தேவையைப் பூர்த்தி செய்கின்ற செயலாக மாறி விடக்கூடாது. மக்களுக்கான சேவையாக இருந்தால் போதுமானது.

*

துக்கப்படாமல்...!! [ கவிதை ]


*
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு சிரிப்புத் துணுக்குகள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு காதல் கவிதைகள்
அனுப்புகிறேன்.
நீ துக்கப்படாமல் இருக்கத்தான்
இனிமையான இசைப் பாடல்கள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
நேரில் சந்தித்து 
அன்பை பறிமாறிக் கொள்கிறேன்
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
திருமண முயற்சியில்
தீவிரமாக இறங்கியிருக்கிறேன்
நீயோ…?
அக்காவுக்கு கல்யாணமான
பிறகு தான் நமக்கென்று…
திடீரென குண்டைத் தூக்கித்
மார்பில் போட்டுவிட்டாயே..?

ந.க. துறைவன்.                            

பாரம்...!! [கவிதை ]

*
வாகனங்கள் பறக்கினறன
தார்ச்சாலைகள் மின்னுகின்றன
நடமாடும் மனிதர்களின்
முகங்களில் சோர்வு
எங்கும் நிழலுக்கு
ஒதுங்க இடமில்லை
வியர்வை நசநசப்போடு
அலைகின்றார்கள்
கடை வீதிகளில்…
ஜோராய் நடக்கிறது வியாபாரம்             
நேரங்காலம் தெரியாமல் நெஞ்சில்

சுமந்துத் திரிகிறார்கள் குடும்ப பாரம்
*

Sunday 5 April 2015

நியதி...!! [ HAIKU / ஹைக்கூ ]


*
இருப்பது எதுவும் எனதல்ல
இருக்கப் போவதும் எனதல்ல
இருக்கின்றது யாருக்குச் சொந்தம்.
*
மழையை எதிர்ப்பார்த்து
கணந்தோறும் காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
கூர்மையான அறிவு இருக்குமோ?
நியதி தவறாமல் வாழும்
ஜீவராசிகளுக்கு…
*

Thursday 2 April 2015

வாசகன்...!! [ கவிதை ]


*
நீயொரு அழகியல் புத்தகம்
அவனொரு தீவிர வாசகன்.
*
படித்து படித்து அலைகிறான்
உன் கவிதை படித்தப் பித்தன்
*
வாசிக்கப் பிரியப்படுகிறவன்
வசிக்கவும் பிரியப்படுகிறான்.

Wednesday 1 April 2015

இலைகளை விலக்கி...!! [ கவிதை ]

இலைகளை விலக்கி…!!
*
காதலியைத் தேடிப்
பறந்துக் கொண்டிருந்ததுப் பறவை.
எங்குத் தேடினும்
பார்க்க இலயவில்லை என்று
ஆழ்ந்த வருத்தம்.
சட்டென கணநேரத்தில்
எங்கிருந்தோ ஒலித்தக் குரல்
கேட்டுத் திரும்பிப் பார்த்தது
மரத்தின் இலைகளை விலக்கி
காதலியைக் காட்டியது காற்று…!!