*
சாதாரண கடைகோடி ஏழை மக்களுக்கும் கடந்த நூற்றாண்டு
காலமாக சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். இப்பொழுது மணியார்டர்
சேவையை நிறுத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. மத்திய அரசு – தனியார்
நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, எல்லா துறைகளையும் தனியார் மயமாக்கல்
செய்து வருகின்றது. அஞ்சல் சேவைகளைப் பெரிதும் தனியார் மயம் ஒப்படைத்த தன் விளைவே,
இப்பொழுது அஞ்சல்துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்பி வருகின்ற செயலாகும்.
ஏதோ உள்ளே விட்டுகிட்டு குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்?. மத்திய அரசு அவர்களின்
அவதூறுகளைப் பட்டுத்தானே தீரவேண்டும். அவதூறு பரப்பும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சட்டரீதியான கட்டுப்பாடுகளையும் விதிக்கவேண்டும்.
சேவை என்பது யாருடைய தேவையைப் பூர்த்தி செய்கின்ற
செயலாக மாறி விடக்கூடாது. மக்களுக்கான சேவையாக இருந்தால் போதுமானது.
*
No comments:
Post a Comment