*
“ குருவே, தொட்டுணரக்
கூடிய பொருட்கள் யாவும் அழிந்து விடுகின்றன. அப்படியிருக்க நிரந்தரமான உண்மை ஏதும்
இருக்கிறதா?”.
“ ஆம், இருக்கிறது.
“ வனப்புடன் பூத்துக் குலுங்கும் காட்டுப் பூக்கள், பார்வைக்கு உறைந்துவிட்டதைப் போல
தோன்றினாலும், உண்மையில் ஒடிக்கொண்டிருக்கும் ஓடை”.
பூக்கள் சீக்கிரமே
வாடிவிடும். இருந்தும், காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். நீரோடை ஒடலாம்.
ஆனால் அதன் மேற்பரப்பு மாறுவதில்லை. வாழ்வின் செயல்பாடுகளுக்குள்தான் அதன் அரத்தம்
அடங்கியிருக்கிறது. மாற்றம் என்ற விஷயம் மட்டுமே மாற்றமில்லாமல் இருக்கிறது.
ஆதாரம் ; ஜென்
கதைகள். தமிழில் ; சேஷையா ரவி. பக்கம் 97.
*
No comments:
Post a Comment