*
மன்மதன் வருகிறான்
ஆண்மை வீரன் வருகிறான்
மலர்கள் ரதம் மீதிலேறி
மன்மதன் வருகிறான்.
*
மங்கையர் மையல் கொள்ளும்
வேங்கை மார்பன் வருகிறான்
கரும்பு வில்லை கையிலேந்தி
கட்டழகன் வருகிறான்.
*
காதல் ராணி ரதியுடனே
காதல் மன்னன் வருகிறான்
தங்க கிரீடம் தலையில் தரித்து
மங்கையர் தலைவனாக வருகிறான்.
*
சந்தனம் கமழும் மார்பில்
ரதியை
அன்பாய் அணைத்து வருகிறான்
காம நதியில் முக்குளிக்கும்-மதனக்
காம சுந்தரன் வருகிறான்
*
உயிர் மையத் தத்துவத்தை
உலகுக் குணர்த்த வருகிறான்
உலக மக்கள் இன்ப வாழ்வில்
உய்த்துணர்த்த வருகிறான்
*
சிவன் சுட்டெரித்தப் போதிலும்
உயிர்த் தெழுந்து வருகிறான்
காவியமாகி நிலைத்து நிற்கும்
ரதி-மன்மதன் வருகிறான்.
*
மண்ணில் வாழும் மக்களெலாம்
நினைவு கூர்ந்து போற்றவே
மனித உருவெடுத்து வருகிறான்.
“ மன்மத ” ஆண்டாகி வருகிறான்.
ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment