*
காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன்
மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும் மோசமாகவும் பேசியதால்
அந்தக் கதையானது வேடிக்கையானதாக இல்லை. அப்போது முல்லாவைத் தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை.
ஆனால் முல்லா இதயம் நிறைந்து சிரித்தார்.
அந்த அந்நியர் போன பிறகு நான் முல்லாவிடம் “ முல்லா நீ ஏன் சிரித்தாய்? ” என்று கேட்டேன்.
அதற்கு முல்லா, “ இதை நான் எப்போதும செய்வேன். நீங்கள் சிரிக்கவில்லை
என்றால் அதை அவர்கள் மீண்டும் சொல்லக்கூடிய ஆபத்து எப்போதும் இருக்கிறது. ” என்றார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் - பக்கம் 358.
தகவல் : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment