சில கணங்களில்...
+
மௌனமாய் இருந்தவளை
உசுப்பி விட்டு போனான்
கணவன்
அவள்
சிணுங்கல
சிறிது நேரத்தில்
மறைந்தது.
+
புருவங்கள் மத்தியில்
ஸ்டிக்கர் பொட்டாய்
நெற்றியில்
வைத்திருக்கிறாள்
என்னை
நினைவு கூர்ந்து...
+
வேகமாக கதவைச்
சாத்தினாள்
எதற்கு என்று
பார்த்தேன்
தெருவைக்
கடந்து போகிறான்
எதிர் வீட்டு வாலிபன்.
+
நிதானமாக
பாதையில் நடந்தாள்
வேகமாய்
ஸ்கூட்டரில் வந்தவன்
இடித்து விட்டு
போகிறான்.
+
கவுச்சி வாடை
அடிக்கிறது
மீன்காரியின்
பேச்சு.
ந க துறைவன்.
குறுங்கவிதைகள்.
No comments:
Post a Comment