நிழல்.
இன்னும் யாருக்கும்
தெரியவில்லை
அவளுக்கு மட்டும்
தெரிந்தது, அது
என்னுள்
புதைந்திருக்கும்
வெளி ரகசியம்.
+
வெட்டி எரித்தார்கள்
சாம்பல் கனன்று உணர்வாய்
எழுகிறது காதல் தீ.
+
வேப்பம் மரங்கள்
வெளியில் நிழல் தரும்
அம்மாவின்
நிழல் என்றும்
அகத்திற்கு
சுகம் தரும்
கற்பக விருட்சம்.
+
மேகங்கள் பயணம் தொலைதூரம்
ஊர் கடந்து போகின்றன
சொட்டு மழைத்துளிகள்
பெய்யாமல்...
+
வெட்டவெளியெங்கும்
பசுமை நிறைந்த மரங்கள்
பறவைகள் பறத்தல்
அகமனதில் பேரிசைச்சல்.
+
கவிதைகளில்
காதல் வாடை
குளிரும் போர்வையும்
பாராட்டு வாடை
காற்று நெகிழ்ந்தது.
ந க துறைவன்.
கவிதைகள்
No comments:
Post a Comment