சூஃபி கதை.
நெய்யும் உண்மையும்!
உழைப்பிற்கு எப்போதும் மதிப்பு கிடைக்கும். உழைத்து வாழ்ந்தால்தான் உண்மையான மகிழ்ச்சி கிட்டும் என்று உழைப்பின் பெருமையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் சூஃபி என்கிற ஞானி.
அங்கிருந்த மூன்று இளைஞர்கள் அதற்கு மாறாக, உழைத்தால் அதற்கானப் பலனை எதிர்ப்பார்க்க வேண்டும். எனவே உழைக்காமல் இருப்பது சிறந்தது என நினைத்தனர். எவரையும் உணர்ந்து கொண்டு அவருக்கு அறிவுரை வழங்குவார் சூஃபி.
இந்த மூன்று இளைஞர்களின உணர்வையும் உணர்ந்து கொண்ட ஞானி, அவர்களை, சந்தைக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஒரு கடைக்குச் சென்று, " பால் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்"என்றார் ஞானி.
காலையில் கறந்தால் மதியத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும் என்றார் கடைக்காரர்.
"இந்த நெய் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்" என்றார் ஞானி.
ஒரு மாதம் என்றார் கடைக்காரர்.
" பால் என்ன விலை, நெய் என்ன விலை" என்றார் ஞானி.
" பால் பத்து ரூபாய், நெய் நூற்றைம்பது ரூபாய்" என்றார் கடைக்காரர்.
இந்த நெய்யை எவ்வாறு தயாரிக்கிறீர்கள் என்றார் ஞானி.
பாலைக் காய்ச்சி தயிராக்கி அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சியே இந்த நெய் தயாரிக்கப்படுகிறது என்றார் கடைக்காரர்.
பின் ஞானி இளைஞர்களைப் பார்த்து, " நீங்கள் உழைக்காமல் இருந்தால் பாலின் கதிதான், கடும் உழைப்பு இருந்தால் நெய்யின் மதிப்பு கிடைக்கும்" என்றார் ஞானி.
இதைக் கேட்ட அந்த மூன்று இளைஞர்களும், இனி உழைத்து வாழ்வது என்று முடிவெடுத்தார்கள்.
ஆதாரம்: சூஃபி கதைகள் -எடையூர் சிவமதி - பக்கம் -2,3.
தகவல்: ந க துறைவன்.
சூஃபி கதை.
No comments:
Post a Comment