Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 21 December 2017

நெய்யும் உண்மையும்!

சூஃபி கதை.

நெய்யும் உண்மையும்!

உழைப்பிற்கு எப்போதும் மதிப்பு கிடைக்கும். உழைத்து வாழ்ந்தால்தான் உண்மையான மகிழ்ச்சி கிட்டும் என்று உழைப்பின் பெருமையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் சூஃபி என்கிற ஞானி.
அங்கிருந்த மூன்று இளைஞர்கள் அதற்கு மாறாக, உழைத்தால் அதற்கானப் பலனை எதிர்ப்பார்க்க வேண்டும். எனவே உழைக்காமல் இருப்பது சிறந்தது என நினைத்தனர். எவரையும் உணர்ந்து கொண்டு அவருக்கு அறிவுரை வழங்குவார் சூஃபி.
இந்த மூன்று இளைஞர்களின உணர்வையும் உணர்ந்து கொண்ட ஞானி, அவர்களை, சந்தைக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஒரு கடைக்குச் சென்று, " பால் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்"என்றார் ஞானி.
காலையில் கறந்தால் மதியத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும் என்றார் கடைக்காரர்.
"இந்த நெய் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்" என்றார் ஞானி.
ஒரு மாதம் என்றார் கடைக்காரர்.
" பால் என்ன விலை, நெய் என்ன விலை" என்றார் ஞானி.
" பால் பத்து ரூபாய், நெய் நூற்றைம்பது ரூபாய்" என்றார் கடைக்காரர்.
இந்த நெய்யை எவ்வாறு தயாரிக்கிறீர்கள் என்றார் ஞானி.
பாலைக் காய்ச்சி தயிராக்கி அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சியே இந்த நெய் தயாரிக்கப்படுகிறது என்றார் கடைக்காரர்.
பின் ஞானி இளைஞர்களைப் பார்த்து, " நீங்கள் உழைக்காமல் இருந்தால் பாலின் கதிதான், கடும் உழைப்பு இருந்தால் நெய்யின் மதிப்பு கிடைக்கும்" என்றார் ஞானி.
இதைக் கேட்ட அந்த மூன்று இளைஞர்களும், இனி உழைத்து வாழ்வது என்று முடிவெடுத்தார்கள்.

ஆதாரம்: சூஃபி கதைகள் -எடையூர் சிவமதி - பக்கம் -2,3.
தகவல்: ந க துறைவன்.


சூஃபி கதை.


No comments:

Post a Comment