கனிந்த சாறு.
1.
சுரக்கும் தேன்
உமிழ்நீர்
கனிந்த சாறு
போதை என்று
கூறு.
2.
வண்ணத்துப்பூச்சிகள்
வழி தவறி
போவதில்லை
மனிதன் தான்
பல நேரங்களில்
வழி தவறி
போகின்றான்.
3.
சோர்வோடு சூரியன்
சாய்கிறான் மேற்கில்
மாலை
மஞ்சள் வெயில்
அழகு.
4.
எங்கிருந்தோ
தூண்டுதல் வருகிறது
இங்கிருப்பவர்கள்
ஆடுகிறார்கள்.
5.
அவரவர்கள்
நமச்சலை
அவரவர்களே
சொறிந்து
கொள்கிறார்கள்.
ந க துறைவன்.
குறுங்கவிதைகள்.
No comments:
Post a Comment