சாயல்
யாருடைய சாயல்
நான்
அம்மா அப்பா
தாத்தா பாட்டி என
வேறு
யாருடைய சாயல்
பிறந்த நாள் தொடங்கி
இன்று நாள் வரை
சாயல்
அடையாளம் வைத்து தான்
என்னை ஊர் ஜனங்கள்
ஊர்ஜிதப்பபடுத்தி
உறவாடுகிறார்கள்
சாயல் மரபணுக்கள்
சார்ந்தது என்றாலும்
யாருடைய சாயல் என்று
எனக்கு இன்னும்
புலப்படவில்லை...
கடைசியாக
இறந்த போது பெரியப்பா
சொன்னார்.
" டேய், நீ உன் பாட்டி
முகச் சாயலை அப்படியே
கொண்டிருக்கேன்னு..."
ந க துறைவன்.
யாருடைய சாயல்...
No comments:
Post a Comment