1.
நதியை விமர்சிக்காதே
ஓடக்காரனை விமர்சிக்காதே
மழையை விமர்சிக்காதே
ஆனால், இப் பெருவெளியை
விமர்சம் செய்
எப்போதும்
ஏற்கும் இயற்கை.
2.
விமர்சனத்தைப்
பார்த்து
ஏன் எரிச்சல் படுகிறார்கள்?
நெஞ்சைத் தைக்கிறது
நெருஞ்சி முள்.
3.
பட்டாம்பூச்சியின்
காதலை
எல்லோரும் விமர்சிக்கிறார்கள்
ஆனால், தினந்தினம்
புதியதாய் மலர்கிறது
காதல்.
4.
ஆத்திகனைப் பேச
வைக்கிறான்
நாத்திகனைப் பேச
வைக்கிறான்
எல்லோர் விமர்சனத்தையும்
உவந்து ஏற்கிறான்
வேலை வெட்டி இல்லாத
சமத்துவ சிவன்.
5.
யாரையும் நீ விமர்சிக்காதே
உன்னையே நீ விமர்சித்துக்
கொள்
அன்றே நின்று கொல்லும்
மனசாட்சி.
6.
விமர்சனம் செய்யாதே
சிவனே என்று சும்மாயிரு.
7.
கடவுளை விமர்சனம்
செய்
கோபப்பட மாட்டார்
மனிதனை…???
8.
தேவலோகத்தின்
அரசியல் கலக
விமர்சகர் நாரதர்.
9.
கவிதையை, கவிஞனை
விமர்சிக்காதே
வெறுக்கப்படுவாய்
விலகப்படுவாய்
நீ..நீ..!!
ந.க. துறைவன்.
நாரதரின் அடையாளம்
ReplyDeleteஅருமை