இருள் சூழ்ந்த
நேரம்
மரங்கள் அசையவில்லை
ஈரக்குளிர்
மின்விளக்குகள்
எரிந்தாலும்
கருமை படர்ந்த
வெளிச்சம்
மழைத்துளிகள் சொட்டுகின்றன
விட்டில்கள்
தெரு மின்விளக்கைச்
சுற்றிச் சுற்றி
விளையாடுகின்றன
பாதசாரிகள் யாரும்
அந்த விளையாட்டைப்
பார்த்து
களிக்கவில்லை
ஆனந்த உற்சாகத்தில்
காமும் அன்பும்
பரஸ்பரம்
பகிர்ந்து மகிழ்கின்ற
காட்சி
இரகசியம் போல.
நிகழ்கிறது
அக்கணத்தில்
விட்டில்கள் அம்பலத்தில்
பேரின்ப வாழ்க்கையைத்
திருவிழா கொண்டாடுகின்றன!!
ந.க. துறைவன்.
சிறந்த பாடல் வரிகள்
ReplyDelete