1,
அவளுள் நான்
என்னுள் அவள்
ஐக்கியமாகி
சுதந்திரமாய்
வாழ்கிறோமெனினும்
தினந்தினம்
எங்களிருவரையும்
இருளில்
அடிமைப் படுத்தி
வெல்கிறது காமம்,
2,
என்னுள் நீ பூரணமாய்
நிரம்பி விடு
மௌனத்தை வழங்கி விடு
உன்னுள்
கரைகிறேன் மறைகிறேன்
சூ†சுமமாய்,
சூன்யத்தோடு சூன்யமாய்
உன்
இருப்பில்
நான்,
3,
மழையில் நனைந்துக் குளித்து
மன அழுக்குகள் நீக்கி
எத்தனை உற்சாகமாய்
பூத்திருக்கிறது அந்தப் பூக்கள்
உலகத துயரமெல்லாம் மறந்தும,
No comments:
Post a Comment