நிறைய
கேள்விகள் கேட்டேன்
அவளிடம்
எந்த
பதிலும் சொல்லவில்லை
எல்லாமே
மௌனம்.
*
ஏமாற்றங்கள்
ஏமாற்றங்களால்
தான்
வெல்லப்படுகின்றன.
*
பூமியில்
உள்ளவர்களை
இரவில்
வேடிக்கைப் பார்த்து
சிரிக்கிறது
நிலா.
*
கலையாத
மேகம்
நூல்
இழைகளாய்
இறங்குகின்றன
மழை
ந.க.
துறைவன்.
No comments:
Post a Comment