*
அதிகாலை
வேளைத் தவிர
மற்ற
பொழுதுகளில்
கொதிப்பேற்றும்
வெயிலில்
பாதையோரச்
செடிகளில்
காய்ந்து
கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால்
விதி
மலர்கள்
வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால்
வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத்
துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை
முற்றுப்புள்ளி.
*
No comments:
Post a Comment