*
மலையடிவாரத்து
பசுமையான
வயல்வெளியிலிருந்துக்
கூப்பிட்டக் குரல்
எதிரொலித்தது
எனது குரல் தானா
என்று
யோசிக்கையில் அடுத்த
நொடியே
எங்கிருந்தோ இன்னொரு
குரல்
எதிரொலித்தது என்
குரலை மீறி
அது யார் குரலாகயிருக்கும்
என்று
நினைக்கையில் அவள்
குரலாய்
இருக்குமோவென எதிர்ப்பார்ப்பு
வீண்போகவில்லை.
அது
அவள் குரல் தானென்று
மனம்
உறுதிப்படுத்த
சில நொடிகள் கழிந்தன
என் குரல் கேட்டவளும்
அப்படித்தான்
நினைத்திருப்பாளோ
என்று தெரியவில்லை?
இருக்கும் வேலையை
விட்டுவிட்டு
வருகிறாளா என்று
கண்கள் மேய்ந்தன.
யாரோ தொலைவில்
வருகிற மாதிரி
காலடிச்சத்தம்
மெல்லக் கேட்கிறது
.அருகில் வந்த
பிறகு தெரிந்தது
அவள் பக்கத்து
வயலில்
வேலைப் பார்க்க
வந்திருக்கும்
தினக் கூலிப் பெண்
பொன்னம்மாள் என்று.
யார்தான் எவர்தான்
எப்பொழுது
ஏமாற்றுவார்கள்
என்றில்லை
பலரையும் இப்படித்தான்
போலியாக
எதிரொலித்து ஏமாற்றி
விடுகிறது
நம்பியவர்களை எதிர்க்குரலொலி.
*
No comments:
Post a Comment