கிறுக்கல்கள்
1.
புரியவில்லை என்றான்
எதுதான் புரிந்திருக்கிறது
அவனுக்கு
கோழி கிறுக்கல்களாய்
கையெழுத்து.
2.
தோழிகளைப் பிரிந்து
தனியாய்
யாருடன்
விளையாட வந்தது
மலையில்
இறங்கிய நிலா.
3.
மறைக்கப்பட்டது
யாருடைய முகம்?
சொல்லப்படும் கதை
எது நிஜம்?
அரசமரத்தடியில்
பிள்ளையார்கள்.
4.
குட்கா
பான்மசாலா
புகையிலை
துர்நாற்றம்
குப்குப்பென்று
வீசுகிறது
தமிழகமெங்கும்.
5.
வெளிச்சத்தில் இருட்டு
மனதில் தெளிவு
பாதையில் சரளைக் கற்கள்.
6.
சோக முகம்
உடல் மறைந்திருக்கிறது
வீட்டின் கதவுக்கு
பின்னால்.
7.
அருவி நீர் சலசலப்பு
பாறைகள்
உணர்ந்தனவா?
குரங்குகள் குதியாட்டம்.
8.
அமைதியான
தாமரைப்பூக்கள்
ஆணவத்தின் மிதப்பில்
அகன்ற
இலையில்
தத்தளிக்கும்
நீர்த்துளிகள்.
9.
தொட்டியில் பூச்செடிகள்
தும்பிகள் வருகை.
துவங்கியது
மழைக் காலம்.
10.
இசையின் ஒலி
இருளில் ஐக்கியமானது
அமைதியில்
மனம் ஒடுங்கி.
ந க துறைவன்.
03-Oct-2018 10:25:42 AM
கிறுக்கல்கள் கவிதைகள்
No comments:
Post a Comment