*பார்த்தவர்களை
பார்க்கவில்லை என்று
பொய் சொல்கிறது கண்கள்
*பெண்ணின் புன்னகைக்குள்
புதைந்திருக்கிறது
வேதனைப் புதையல்.
*குறுஞ் செய்தி
தொடர்பில் காதலர்கள்
வெட்கத்தில் எழுத்துக்கள்.
*காற்றில் பறக்கவில்லை
வாயில் கரைந்தது
பஞ்சு மிட்டாய்.
*நகரக் குளிர் பானக் கடையில்
கோலி சோடா கேட்டு
அலைந்தார் கிராமவாசி.
No comments:
Post a Comment