வானவில்லைப் போலவும்,அரைவட்டமாகவும்
வளைந்து வளைந்து வானில் பறந்துத் திரிந்தன
வெண்ணிறக் கொக்குகள். அவைகள் இரு
பிரிவாகப் பிரிந்து, ஓரு கூட்டம் புங்கமரக்
கிளைகள் மீதும்,இன்னொரு கூட்டம்
பசுமையான வயல்களிலும் இறங்கின.
வயல்களில் இறங்கிய கொக்குகள் நீரில்
இரைத் தேடின. ஓன்றை ஓன்றைத் தழுவி
எம்பிப் பறந்தும்,இறங்கியும் விளையாடி
மகிழ்ந்தன. அவ்வயல்,பச்சை நிறம் மாறி
வெண்மையாய் காட்சியளித்தன. அதனைப்
பார்த்தச் சிறுவர்கள்,
கொக்…கொக்…பாலாடை
கோழிகுஞ்சிப் பாலாடை
ஆத்துலே கல்லுப் போடு
எம் மேலே பூவைப் போடு.-என்று
கோரசாகப் பாடினார்கள்.
சிறுவர்களின் பாடலைக் கேட்டு
சிரித்து மகிழ்ந்து
நடனமாடின கொக்குகள்.
No comments:
Post a Comment