இடைவெளிக்குப் பிறகு
சந்தித்துக் கொள்ளும்
நண்பர்கள்
என்னடா,
நல்லா யிருக்கியா?
இருக்கேன்.
நீ எப்படி யிருக்கே?
இருக்கேன்.
இருவருமே
நல்லாயிருப்பதாகவே
அன்பாகப் பேசிக் கொண்டு
மெல்லியப் புன்னகையை
உதிர்க்கிறார்கள் கைக் குலுக்கி,
சம்பிரதாயமாக
நலம் விசாரித்துப்
பரிமாறிக் கொள்வதிலும்
நிலவுகின்றதொரு
மனத் திருப்தி.
No comments:
Post a Comment