Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Monday 17 February 2014

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்


*உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது
உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும் 
கொள்ளாதீர்கள். இது வெளிப்படையாக கோபத்தைக் காட்டுவதை
விட மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை
வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ வெறும் 
லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க
ஓரே வழி இது தான்.

*உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில்
நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன
அமைதி கிட்டும்.

*உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் நீங்கள் செய்யக் கூடாது
என்று எதையெல்லாம் நினைக்கறீர்களோ அந்த எல்லாக் காரியங்களையும்
செய்யாமல் நிறுத்துங்கள். அதே போல நீங்கள் செய்ய வேண்டும் என்று
நினைக்கும் காரியங்களை உடனே செய்யத் தொடங்குவதும் அதை போல
முக்கியததுவம் வாய்ந்ததாகும்
.
*ஓரு சில நம்பமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தைப்
பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருக்கிப் பழக வேண்டாம்.
அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்கலைத்து
மன அமைதியைக் கெடுக்கிறது.

*வாழ்க்கையில் நேரிடும் ஓவ்வொரு அனுபவத்தையும் அது வரும் விதத்திலேயே
ஏற்றுக் கொள்ளுங்கள். முணுமுணுக்காதீர்கள். எரிச்சல் கொள்ளாதீர்கள்.
வருந்தாதீர்கள். மகிழ்ச்சி அடையவும் வேணடாம். அமைதியாயிருங்கள்.


-ஆதாரம்:- ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் “மன அமைதி”-என்ற சிறு
          பிரசுரத்திலிருந்து.

No comments:

Post a Comment