வண்ணத்துப் பூச்சியின்
மௌனம்
மலருக்குப் புரியும்.
காற்றின் மௌனம்
மரங்களுக்குப் புரியும்.
மேகத்தின் மௌனம்
பயிர்களுக்குப் புரியும்.
காவிரியின் மௌனம்
கரைகளுக்குப் புரியும்.
விதையின் மௌனம்
மண்ணுக்குப் புரியும்.
பிறந்தப் பூமியில்
வாழ்வினை வெறுத்து
அமைதியற்று
வேதனைப் புலம்பலை
மௌனமாய் அடக்கி
வாழும் மானுடத்தின்
மௌனம்
யாருக்குப் புரியும்?.
No comments:
Post a Comment