* காலில் தைத்த முள்
நெஞ்சில் வலி
தாயின் ரத்த பாசம்.
*மண்ணில் பிறந்து வளர்ந்து
மண்ணிற்கே உரமான இலை
என் உடம்பு.
*வீண் சண்டைக்குப் போய்
வாலிழந்து வந்தது
சவரில் வசிக்கும் பல்லி.
*பயிருக்குப் போட்ட
உரத்தைத் தின்றது
சத்தில்லாத மண்.
*இறந்த கரப்பானின்
இறுதி ஊர்வலத்தில்
கலந்துக் கொண்டன எறும்புகள்.
*புணர்ச்சியின்றி கருவுற்று
காய்த்தன கனிகள்
காற்று கொடுத்த மகரந்தம்.
-ந.க.துறைவனின் “நதிக்கரைகள்”-என்ற
தொகுப்பிலிருந்து.
No comments:
Post a Comment