வாசிப்பில்
ரசித்த வைரவரிகள்.
*
எனது
கூந்தல் எவ்வளவு அழகு1 எனப் புகழ்ந்தார்கள். தலைமுடியைத் தவிர அழகென்று சொல்ல என்னிடத்தில்
வேறேதுமில்லை.என்பதாக அதனைப் புரிந்துக் கொண்டேன். அத்தனை பாராட்டுக்குதலுக்குரிய அக்கூந்தலை
எனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது ஐந்து ஆண்டுவளுக்குப் பிறகு அம்மாவைப் பிரிந்திருந்தபோது.
பாரீஸ்நகரில், முடிதிருத்ததும் நிலையமொன்றில் வெட்டச்சொல்லி விட்டேன். நான் “ வெட்டுங்கள்
” என்றேன். அவன் வெட்டினான். கண்சிமிட்டும் நேரம், தலைபாரத்தினை குறைக்க முனைத்ததுபோல
கத்திரிக்கோல் செயல்பட்டு கழுத்தை உரச, தரையில் விழுந்தது. வீட்டிற்கு எடுத்துச் செல்ல
விரும்பினால், பொட்டலாம் கட்டித் தருவதாகச்
சொன்னார்கள். வேண்டாமென்னு சொன்னேன். அச்சம்பவத்திற்குப் பிறகு ஒருவரும் எனது தலைமயிரைப்
பற்றி பேசுவதில்லை. அதாவது நீண்ட தலைமயிர் இருக்கையில் வெட்டப்படுவதற்கு முன்னால் என்ன
பொருளில் அதைக் குறிப்பிட்டு பேசினார்களோ?அது இல்லை என்றாகிவிட்டது. அதன்பிறகு எனது
பார்வையையும், சிரிப்பினையும் புகழ்ந்தார்கள். எனக்கும் அது பரவாயில்லை போலிருந்தது.
ஆதாரம்
; காதலன் – மார்க்கெரித் துராஸ் – தமிழில் : நாகரத்தினம்கிருஷ்ணா.
பக்கம்
; 26.
தகவல
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment