*
இரவில்
மூழ்கி, சூன்யமொன்றில் அமிழ்ந்து, எந்தப் பூமியைச் சார்ந்திருந்ததோ அப்பூமியே பிரசவித்ததுப்
போல கன்னங்கறேலெ்ன்றிருந்த வெளியில் காற்று சுழன்று அடித்தது. ஆண்டுகள் பலவாகப் பயணித்ததுப்போல
காற்றுகொள்ள புழுதி மண்டலம் தொடுவானத்தின் மறுகரையில் எரியுண்ட நடசத்திரங்களும் (
black dwarf ) பழுத்துதிர்நத இலைகளும், சுழற்காற்றில் சிக்கித் தவிக்கின்றன. புடத்தில்
உருக்கி எடுத்ததுபோல காட்சிகள்; எலும்புகள் அரக்குபோல இளகின. மூளைகளில் இரத்தம் உறைந்தது. வழிதவறிய அலைகழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான
உயிர்கள் ஒருமித்த குரலில் புலம்புவதுபோல ஒரு குரல். இருள் மூடிய ஆழமான அடர்த்தியான
புகைமூட்டம். மனிதர்கள், காலங்களென்று எதுவுமற்ற சபிக்கப்பட்ட வெளி. வெறுப்பூட்டும்
சூன்யம், நடுங்கச்செய்யும் குளிர். அச்சுறுத்தும் சூறைக்காற்று. அகன்ற வெண்திரை பின்னணியில்
ஆகாயத்தில் ஒளிப்பட்டையைத் தீட்டியவண்ணம் முன்னேறும் மின்னல்.அனைத்துடனும் மோதிப்பார்ப்பதெனத்
தீர்மானித்ததுபோல இரு மனித உயிர்கள். இடியுடன், திடீரென பெய்த மழையில் பூமி நனைந்தது.
அனைத்தும் மூர்ச்சையாயின. வாயடைத்து, பதட்டத்துடன், குளிரைப் போர்த்திக்கொண்டிருந்த
அம்மனிதர்களன்றி வேறு ஜீவன்கள் அங்கில்லை.
ஆதாரம்
: உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக் கதைகள் - தமிழில் ; நாகரத்தினம் கிருஷ்ணா. – பக்கம்
40.
ரசித்தவர்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment