*
பிறந்து
வளர்ந்த குடும்பச் சூழ்நிலை காரணமாக எனது எழுத்தில் சில நெறிகளை கடைபிடிக்க வேண்டியதாயிற்று.
அதுவும் தவிர, எழுத்தென்பது அவர்களுக்கு நீதியைச் சொல்வது, ஒழுக்கங்களைப் பேசுவது,
அந்த நிலை இனி இல்லை. எதையும் எழுதலாம். எதையும் எழுதலாமென்றால், இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது
என்று திட்டவட்டமாக அறிவிக்க முடியாதபடி எதையும் எழுதலாம். விளம்பரம் தேடிக்கொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில இம்மாதிரியான முடிவுகளிலிருந்து நான் மாறுபாடுவதை உணர்கிறேன்.
இப்போது எனது எழுத்து வெளிக்கு எல்லைகள் இல்லை. பிறர் அறியாமல் தன்னை ஒளிக்கவும். காரியம்
ஆற்றவும், வாசிக்கப்படவும் அதற்கு இயலாது. அதை மறைத்து வைக்கவென்று ரகசிய அறைகள் இல்லை.
அதன் பாதகங்களள் குறித்து கவலைகொள்ள எவருமில்லை. இதுபோன்ற எண்ணங்கள் இதற்கு முன்பு
எனக்குத்தோன்றவும் இல்லை.
ஆதாரம்
; காதலன் – மார்க்கெரித் துராஸ். – தமிழில் ; நாகரத்தினம் கிருஷ்ணா. பக்கம் – 19.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment