*
முல்லா நசிருதீனுக்கு உடல் நலமில்லை. மருத்துவரைக் காணச்சென்றார்.
மருத்துவர் கேள்விகள் கேட்டார்.
“ என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். உங்களுக்கு மது அருந்தும்
பழக்கம் உண்டா, ”
“ இல்லை ” என்று சொன்னார் முல்லா. அவர் கை நடுங்கிக் கொண்டிருந்நதது.
முழு போதையில் இருந்தார் முல்லா. அவரிடம் மதுவின் வாடை இருந்தது.
“ சரி அதை விடுங்கள். பெண்கள் தொடர்பு …? ”
“ நிச்சயமாக இல்லை.” என்று கத்தினார் முல்லைா. ஆனால் அப்போதுதான்
ஒரு விலைமகளுடன் இருந்து விட்டு வந்திருந்தார். அவர் முகத்தில் அந்தப் பெணெ்ணின் உதட்டுச்வாயம்
தெளிவாகத் தெரிந்தது.
“ புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டா? ”
அவர் சட்டைப்பையில் ஒரு சிகரெட் பாக்கெட் இருந்தது.
“ சரி முல்லா, இதெல்லாம் இல்லாமல் உங்கள் உடம்புக்கு இது போன்ற
வியாதி வர வாய்பேயில்லையே ”
“எனக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு . டாக்டர். ”
“ அது என்ன? ”
“ அடிக்கடி பொய் சொல்வேன். ”.
*
ஆதாரம் : ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்….” – நூல் – பக்கம்
– 89 – 90.
தகவல் : ந.க.துறைவன்.
No comments:
Post a Comment