*
அண்ட சராசரங்கள்
ஆள்பவளே உன்
ஆன்ம
சொரூபத்தை வணங்குகின்றேன்
அம்மா வென்றே அழைக்கின்றேன்
அன்புடன்
உன்னைத் தொழுகின்றேன்
*
பால்பழம் பன்னீர்
இளநீரில்
இதமாய்
குளிப்பதைக் காண்கிறேன்
சந்தனம் குங்குமம்
முழுக் காப்பில்
சந்தோஷமாய்
கண்டு களிக்கின்றேன்
*
பச்சை சிவப்பு
பட்டாடைகளில்
பளிச்சிடும்
அழகினைக் பார்க்கின்றேன்
வண்ணப் பூக்கள்
உந்தன் மேனியில்
அலங்கரித்து
சிரிப்பதை ரசிக்கின்றேன்
*
தீபஆரத்தி ஒளியில்
நாயகியே - உன்
திருமுகம்
தரிசனம் செய்கின்றேன்
நவராத்திரி ஒவ்வொரு
நாளிலுமே
நவசக்தியே
நமஸ்காரம் குவிக்கின்றேன்.
*
துன்பச் சுமையால்
தவிக்கின்றேன்
சொல்ல
முடியாமல் அழுகின்றேன்
அன்புபொழியும்
எனது அன்னையே
அருளும்
கருணையும் பொழிவாயே!!.
*
No comments:
Post a Comment