*
தேடிப் பிடித்ததோர்
உயர் தென்னையின்
நடுவில்
கொத்தி் கொத்தியே
வடிவமைத்த
வட்டப் பொந்து
மாளிகையை
மரக்கொத்திகளின்
வாரிசுகள்
வேண்டாமென விட்டு
விட்டன.
கோரிக்கையற்று
திறந்தே கிடந்த
அவ்வீட்டை
அப்போதுதான் காதலினால்
இணைந்த
அழகு கிளிகள் இரண்டு
ஆக்ரமித்தன…
அங்கேயே உல்லாசமாய்
உரசித் தூங்கி
பொரித்த குஞ்சுகளோடு
குதூகலமாய் குடும்பமும்
நடத்தின.
எப்படியும்
வழக்காட வரமாட்டார்கள்
வாரிசுகள் என்பதால்….!!
ஆதாரம் : செல்மா
காமராசன் எழுதிய “ யாதும் நானாகி ” – என்ற கவிதை தொகுப்பிலிருந்து – பக்கம் – 103.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment