விழிப்பு
என்னுள் ஒலித்து கொண்டிருக்கிறது
அந்த நள்ளிரவில் எழுந்த
முகாரி ராக இசையின் ஒலி
அதிர்வலைகள் அறையெங்கும்
நிரம்பி வழிகின்றன
அருகில் இருந்தவள் கை
அணைப்பிலிருந்து சற்றே
விலகி இருந்தது
அந்த இசையின் ஒலி
இன்னும் நிற்கவில்லை
அறையின் நீலவொளி பிரகாசம்
அவளின் ஆழ்ந்த உறக்கத்தின்
முகத்தைக் காட்டியது
அவர்கள் விழிப்பதாக தெரியவில்லை
எனக்கும் உறக்கம் வரவில்லை
இசையின் ஒலி எப்பொழுது
நின்றதென்று தெரியவில்லை
இன்னும் நேரமிருக்கிறது விடிவதற்கு...
ந க துறைவன்.
No comments:
Post a Comment