மீதமிருக்கிறது எஞ்சியவைகள்
என்ன செய்வது மீதமிருப்பதை
எவருக்கு கொடுப்பது அந்த மீதியென
யோசிக்கையில்
கொடுக்கும் மீதியை யாரேனும்
வாங்குவார்களா?என்ற கேள்வி
என்னுள் எழுந்தது
காசு வாங்கிக் கொள்வார்கள்
உணவு வாங்கி கொள்வார்கள்
துணி வாங்கி கொள்வார்கள்
வீணான பொருள்கள் வாங்கிக் கொள்வார்கள்
வேறென்ன வாங்கி கொள்வார்கள்?
என்னிடம் இருக்கும் மீதமிருக்குமதனை
யாரேனும் வாங்க மறுத்து விட்டால்
என் மனம் நொந்து போகும்
மீதமிருக்கும் எஞ்சியவைகள்
என்ன செய்வது வீணாக்காமல்...
ந க துறைவன்.
No comments:
Post a Comment