*
அவள்
சொன்னதைச் செய்வாள்
செய்ததைச்
சொல்வாள்
அவள்
சொல்லாமல் விட்டதை
என்னிடம்
சொல்லியும் காட்டுவாள்.
நான்
சொல்லாமல் இருப்பதை
எப்படியும்
சொல்லக் கேட்பாள்
அவள்
என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத்
தெரியாது?
நான்
மறைத்ததும்
அவளுக்குத்
தெரியாது?
மறைத்தல்
என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது
அவரவர் பிம்பம்.
*
No comments:
Post a Comment