தேனினும் இனிமை
சொட்டும்
செங்கனி பழுத்துத்
தொங்கும்
வெனிலின் இளமைக்
காலம்
வான்நிலா பாலில்
நீந்தும்.
பூஞ்சுனைப் புனலில்
மூழ்க
புதுவகை இன்பம்
ஊறும்
தீஞ்சுவைப் பலாவும்
வேரில்
தேன்குடம் எனவே
தொங்கும்.
வந்தது வசந்தம
என்று
சந்தனம் பூசும்
தென்றல்
பந்தல்போல் பசுமை
மின்னும்
சிந்துகள் குயில்கள்.
நிந்தும்.
மலைமகள் மார்பில்
கூட
மாலைபோல் அருவி
இங்கே
இலையுதிர் காலம்
மாறி
மலர்ந்தது புதிதாய்க்
காலம்.
சுடுவெயில் வெம்மை
மாற
சுகந்தரும் நிழலின்
தன்மை
கொடுமைக்கு மாற்றுண்
டென்ற
கவிதையை வசந்தம்
பாடும்.
கவிஞர். சி.விநாகமூர்த்தி
– ஒளியின் நெசவு – நூல் – பக்கம் – 115.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment