பல்லியின்
வாலசைவில்
படத்திலிருந்தப்
பூ சரிந்து
கீழே
விழுந்தது நல்ல சகுணமென
உணர்ந்து
அப்பூவை எடுத்து
கண்களில்
ஒற்றித் தலையில்
சொருகி
வைத்துக் கொண்டாள்
அக்கா
வெளியூரிலிருந்து
கணவன் வரப் போகும்
நேரத்தை
நினைத்துக் கொண்டிருப்பாளோ?
*
No comments:
Post a Comment