உனக்காக
காதல் கவிதை
செல்லில் எழுதி
குறுஞ்செய்தி
அனுப்பவும் நினைத்து
டைம் செய்யும் போதேதான்
அம்மாவின் அழைப்பு குரல்
" வாடா, ஒரு வேலை என்று..."
அப்பா, என்னைத் திட்டிவிட்டு
போகிறார்
வெளியில்
பூக்காரி குரல்
யார் மீது கோபப்படுவது?
வார்த்தைகள்
அப்படியே நிற்கின்றன
முற்றுபெறாமல்...!!
ந க துறைவன்.
முற்றுபெறாத கவிதை
No comments:
Post a Comment