முல்லா கதை
முல்லா நஸ்ருதீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இருந்தது.
எனவே நீதிபதி அவனிடம், "முல்லா உனக்கு வயது என்ன?,
" நாற்பது " என்றான் அவன்.
உடனே நீதிபதி, "ஆனால் இது விநோதமாக உள்ளது. நீ என்னை ஆச்சரியமடையச் செய்கிறாய். ஏனெனில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நீ இதே நீதிமன்றத்திற்கு வந்தாய். அப்போது அந்த நேரத்திலும் நீ நாற்பது என்று தான் கூறினாய் " என்றார்.
அதற்கு முல்லா, "ஆம், நான் ஒரு கொள்கை மாறாத மனிதன். ஒருமுறை நான் ஏதாவது ஒன்றை கூறிவிட்டால், நீங்கள் என்னை நம்பலாம். நான் வேறு எதையும் கூறமாட்டேன்" என்றான்.
ஓஷோ
ரகசியமாய் ஒரு ரகசியம் - பாகம் - 2, பக்கம் - 163 - 164.
தகவல் : ந க துறைவன்.
முல்லா கதை
No comments:
Post a Comment