*
செடிகளின் மீது
வந்து
அமர்ந்தக் குருவிகளை
விரட்டிட மனமில்லாமல்
வேடிக்கைப் பார்த்து
நின்றான் குட்டிப்
பையன்.
குருவிகள் அவனைப்
பார்த்து
குதித்துத் தாவி
பறக்கிறது.
அவன் கைத் தட்டிச்
சிரிக்கிறான்.
மீண்டும் அவனருகே
வந்து
விளையாடுகிறது.
அம்மாவை அழைத்துக்
காட்டுகிறான்.
அவன் மனமெல்லாம்
குருவிகள்
சந்தோஷ அருவிகள்.
*
No comments:
Post a Comment