.
ஏழைகளே இல்லாத தமிழகம்.
சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை.
நல்வாழ்த்துக்கள்
அம்மா. சொல்லாததையும் சொல்லி செய்து காட்டப் போறீங்க. ஏழைகள் இருந்தா தானே இலவசம் கொடுக்க
முடியும். இலவசம் கொடுத்தா தானே ஒட்டுப் போடு வாங்க. எந்தப் பணக்காரனும் ஓட்டே போட்றதேயில்லையே.
எல்லோருமே பணக்காரங்க ஆயிட்டா ஓட்டே போட மாட்டாங்களே!. இதுதான் காதுலே பூவு சுத்துறதுங்கிறது.
2.
ஏழைகளுக்கு புதிய மருத்துவச் சலுகைகள்.
பிரதமர் மோடி அறிவிப்பு.
கடந்த மூணு வருசத்துக்கும்
மேலாக BSNL ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவச்
சலுகைகள் நிறுத்தி வைச்சி இருக்கீங்களே, அதை கொஞ்சம் கொடுக்க பரிந்துரை செய்யுங்க.
இந்த செய்தி உங்க கவனத்துக்கு இன்னும் வரவில்லையோ? போராட்டம்
ஆர்ப்பாட்டம் எல்லாம் செஞ்சிக் கேட்டுப் பார்த்தாங்க. இன்னும் கிடைச்ச பாடில்லை. கொஞ்சம்
மனசு வையுங்க பிரதமர் சாப்.
3.
மூத்த குடிமக்களை இளைஞர்கள் மதிக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர். சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எத்தனை இளைஞர்கள்
இன்று பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள். அவர்கள் சினிமா கலாச்சாரத்தில் தானே வளர்ந்து
கொண்டிருக்கிறார்கள். மூத்த குடிமக்களை மதிச்சி நடந்தா சரி தான்!.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment