1.
தடையில்லாத
மின்சாரம் வழங்குவதாகச் சொல்கிறார்கள். சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். ஆனால் மறைமுகமாக
தினமும் எப்படியும் ஒரு நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மின்சாரம் கிடையாது. இதற்கு
என்ன பெயர்?
2.
இன்று
சனிக்கிழமை மின் பராமரிப்பு பணி நிமித்தமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. வேலூர்
சத்துவாச்சாரி பகுதியில் மின் ( தடை ) நிறுத்தம்
என்று பத்திரிகையில் செய்தி வந்நிருக்கிறது. இது மாதாமாதம் நடைபெறுகின்ற பணி. சில மாதங்களில்
இந்த செய்தி கூட வெளி வருவதில்லை. ஆனால் மின்
தடை இருக்கும்.
3.
தமிழ்
நாட்டிற்கே முறையாக மின் விநியோகம் இல்லாதபோது, பற்றாக்குறை இருக்கும்போது, உபரி மின்சாரத்தை
வெளிமாநிலத்திற்கு விற்கப்போவதாக வேறு செய்திகள் வருகின்றன. அப்படியென்றால், தாராள
மின் உற்பத்தி இருக்கும்போது எதற்காக மின் தடை?
பேச்சு
ஒன்று செயல் ஒன்றாக இருக்கிறது. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்ற குறள் தான் நினைவுக்கு
வருகின்றது.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment