“
ஏன் உங்களை எல்லோரும் பெயர்ச்சொல்லி அழைக்கிறார்கள்? ”
நான்
தான் அப்படி அழைக்கும்படி சொன்னேன். அழைப்பதற்காகத்தானே பெயர் இருக்கிறது. ஒரு சிறுமி
என்னை பெயர்ச் சொல்லி அழைக்கும்போது, அந்தச் சிறுமியின் வயதுடையவளாகவே நான் ஆகிவிடுகிறேன்.
அந்த ஆனந்தம் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது கொடுக்கும் புத்துணர்ச்சி எனக்குப்
பிடித்திருக்கிறது. அம்மா, அப்பா, கணவன் ஆகியோர் மட்டுமே வழக்கமாகப் பெயர்ச் சொல்லி
அழைப்பார்கள். என் வாழ்வில் இவர்கள் அனைவரையும் நான் வரிசையாக இழந்துவிட்டேன். என்
பெயரையும் நான் இழக்கக் கூடாது அல்லவா? எனது பெயரைச் சொல்லி அழைக்கப்படும் ஒவ்வொருமுறையும்
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் புத்துணர்ச்சியிலிருந்து ஒவ்வொரு நாளையும்
கழிக்கத் தேவையான சக்தியை நான் பெற்றுக்கொள்கிறேன்.
ஆதாரம்
; சாருஸ்ரீ – கங்கோத்ரி – சிறுகதை தொகுப்பு – பக்கம் – 8.
தகவல்
: ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment