1.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 58 கிலோ ,.ப்ரிஸ்டைல் மல்யுத்தப்
போட்டியில் இந்தியாவின் சாக்க்ஷி மாலிக் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு
முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வெண்கலம் பதக்கம்
வாங்கியதற்கே இந்த அமர்க்களம் என்றால் தங்கம். வென்று இருந்தால் எப்படி கொண்டாடியிருப்பார்கள்.
இந்தியாவிலே தங்கம் விலையேறி போனதால் மக்களுக்கே தங்கம் கிடைக்க மாட்டேங்கிறதாலே, ரியோ
ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் இன்னும் கிடைக்கலே போல இருக்கு.
2.
தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தருவதற்கு மறுத்து, நதியின்
குறக்கே அணைகள் கட்டி, காவிரியில் கர்நாடகம், முல்லைப் பெரியாரில் கேரளம், பாலாற்றில்
ஆந்திரம் என்று செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தையே சுற்றி வளைத்து பாலைவனமாக்கி
விடுவார்கள் போல இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது? அப்படியென்றால்
இப்பிரச்சினைக்கு ஏன் தீர்வு காண முடியவில்லை.
எல்லாமே அரசியல் உள்நோக்கம் தானே?
*
3. .
ஆந்திராவில் ‘ செடி வங்கி ‘ தொடங்க முடிவு.
பாராட்டுக்குரிய
செய்தி. இந்த செடி வங்கி தமிழ்நாட்டில் தொடங்கினா அதுக்கு என்ன பேரு வைப்பாங்க.
தொகுப்பு ; ந.க.து்றைவன்.
*
No comments:
Post a Comment