பணம்
கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம்
என்றால் இன்னல் தரிசனம்.
*
விக்கல்
எடுத்தால் யாரோ திட்டுகிறார்களாம்.
புரையேறினால்
யாரோ நினைக்கிறார்களாம்.
*
தன்
குறையை தானே அறியாதவன்.
அடுத்தவன்
குறையைச் சுட்டுகிறான்.
*
ஒருவர்
இல்லாதபோது அவரைப்பற்றி பேசுகிறார்கள்.
ஒருவர்
இருக்கும்போது ஏதுவும் பேசுவதில்லை.
*
தேனீர்
உதட்டில் வைத்து குடிக்கிறார்கள்.
குளிர்பானம்
குழாய் வைத்து குடிக்கிறார்கள்.
நேரம்
தமிழில் கேட்டான்
ஆங்கிலத்தில்
பதில் சொன்னான்.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment