1.
நல்லாட்சி என்பது மக்களின் குறைகளைக் கேட்பது
மட்டுமல்ல, அவற்றுக்குத் தீர்வு காண்பதும் தான் ஜனநாயகத்தின் உண்மையான அடித்தளம். மத்திய
அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி ஆட்சி நிர்வாகத்தில் பொதுமக்களும்
பங்களிக்க வேண்டும். - பிரதமர் மோடி.
பேச்சுக்கும் நடைமுறைக்கும் எங்கோ கொஞ்சம் இடிக்குதே! மோடி ஸாப்.
2.
ஹிந்து ஆன்மீக கண்காட்சி நடந்த நிகழ்வில்
10, 000 பேருக்கு துளசிச் செடி இலவசமாக வழங்கப்பட்டது.
துளசிக் செடி இலவசமாக வாங்கிச் சென்றவர்களெல்லாம் யாருங்க?
3.
தூய்மை இந்தியா – திட்டம் மக்கள் இயக்கமாக
மாற வேண்டும்.
வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்ஃ
தூய்மை இந்தியா இன்னும் பாஜக இயக்கமாகத் தானிருக்குப் போல.
தொகுப்பு : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment