1.
குஜராத் பேரவையில் அமளி ; 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்.
அடடா! தமிழ்நாட்டிலே
79 பேர் இடைநீக்கம். அப்போ எதுக்கு இவங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புறாங்க. மக்கள்
பிரச்சினையை பேசத்தானே அனுப்புறாங்க. சும்மா உட்கார்ந்து பென்ச் தட்டிட்டு வரவா?
2.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தவிடுவது சாத்தியமில்லை.
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
தமிழகத்தைத்
தண்ணி இல்லாத காடாக மாத்திடுவாங்க போல இருக்கே. இந்திய மக்கள் ஒற்றுமை என்பது இதுதானா?
3.
நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு. முதல்வர் ஜெ.அறிவிப்பு.
ஏற்கனவே பி்எட். படிச்சவங்க வேலை கிடைக்காம காத்திருந்து
காத்திருந்து கிழடாகி இருக்காங்க. இனிமே நான்கு
வருஷம்னா சொல்லவே வேண்டியதில்லை. பாவம் பட்டதாரிகள்.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment