அழகழகாய்
ஆடையணிந்துப் பழகி
இந்த உடல்
இறப்புக்குப் பின்
அரைஞான் கயிற்றையும்
அறுத்தெறிந்து
நிர்வாணமாய்
குழியில்போட்டு
மூடிவிடுகிறார்கள்
அல்லது
எரித்துவிடுகிறார்கள்
மரணித்தவன்
ஏழையா?
பணக்காரனா?-என்பது
மண்ணுக்குத் தெரியுமா?
மழையில்
நனைந்துக் குளித்து
மன அழுக்குகள் நீக்கி
எத்தனை உற்சாகமாய்
பூத்திருக்கிறது
அந்தப் பூக்கள்
உலகத்
துயரமெல்லாம் மறந்து.
No comments:
Post a Comment