ஃ பெண்ணைத் தேடு
காதலி
காதலை உணர்
அனுபவி.
காதல் உன்னதம்
உடலின் பேரின்பம்
வென்றவர்க்குத்
தென்றல் காற்று
தோற்றவர்க்கோ
கடும்புயல்! !
ஃ நீரில்
எரிந்தக் கல்
வட்ட வட்ட
அலைப் பரப்பி
கரைத் தொட்டுத்
திரும்புகிறது
காதலி,
வீசியப் பார்வை
கனவில்
வந்து வந்து
போகிறது! !
ஃகாதல், கனவு
நனவு, வாழ்வு
மரணம்
இந்த உலகிற்கு
நாம், வந்தவேளை
முடிந்து விட்டதோ?
உதிர்ந்தப் பூவாய்
மண்ணில்! ! !
No comments:
Post a Comment