*காற்றில் பறக்கவில்லை
வாயில் கரைந்தது
பஞ்சு மிட்டாய்.
*நகரக் குளிர் பானக் கடையில்
கோலி சோடா கேட்டு
அலைந்தார் கிராமவாசி
*உண்மையை மறைத்து
கையடித்துச்
சொல்கிறார்கள் பொய்
.
*அரசியலாகி வட்டது
அரும்பும் மொட்டுக்களின்
இன்றையக் காதல்
.
கொதித்து அழுகிறது
சூடேறிய
குளிர்ந்தத் தண்ணிர்
முள் குத்தி
காயம் பட்டது
சைக்கிள் டயர்.
No comments:
Post a Comment